பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற் றங்கள் நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் நிலையில், ஹரியானா மாநி லத்தின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயி லும் மாணவிகள் 15 பேர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு குடியரசுத்தலைவர், பிர தமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு 15 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அக்கடிதத்தில், “பள்ளியின் தலைமையாசிரியர், தங்களி டம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக வும், இதை வெளியே சொன்னால், செய் முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டுகிறார்” என தெரிவித்தி ருந்தனர். கடிதத்தை கண்ட குடியரசுத் தலை வர் அலுவலகம் ஹரியானா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, அதன் பிறகே வழக்குப் பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை அளித்ததது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த தலைமையாசிரியரை ஞாயிறன்று போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேடிக்கை பார்த்த காவல்துறை? பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப் பட்ட மாணவிகள் பள்ளியின் மிரட்டலுக்கு பயந்து குடியரசுத்தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள் ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள் ளது. ஆனால் இந்த விவகாரத்தில் பாதிக் கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ள தாக ஆதாரமற்ற மற்றொரு தகவல் வெளி யாகியுள்ளது. பள்ளி தலைமையாசிரி யருக்கு ஆதரவாக போலீசார் செயல் படவே மாணவிகள் குடியரசுத்தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதி பதிக்கு கடிதம் எழுதியுள்ளனர் என கூறப் படுகிறது.