states

img

ஆராய்ச்சிகளை முடக்கும் ஜிஎஸ்டி வரி

ஆராய்ச்சிகளை முடக்கும் ஜிஎஸ்டி வரி

புதுதில்லி  இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியமான தடையாக ஜிஎஸ்டி வரி உள்ளது என ஆராய்ச்சியா ளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  அறிவியல் உள்கட்டமைப்புக ளுக்கான பொருட்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான ஆய்வுப் பொருட் கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி கார ணமாக ஆராய்ச்சிப்பணிகள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றன.  அதிநவீன ஆய்வக உபகர ணங்கள், இரசாயனங்கள் போன்ற அத்தியாவசிய ஆராய்ச்சிக்கான பொருட்களுக்கு 5-18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. இதனுடன்  விலைவாசி உயர்வும் இணைவதால் ஆராய்ச் சிக்கான செலவினங்களும் முதலீடு களும் தொடர்ந்து அதிகமாகிறது. இதனால் சிறிய அளவில் முதலீடு செய்து ஆராய்ச்சிப் பணி களை மேற்கொள்ளும் விஞ்ஞானி களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்க ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திப்பதுடன் ஆரா ய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதியிலேயே முடங் கும் நிலையும் உருவாகிறது.  இதனால் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சி  தேக்கமடைவது, புதிய கண்டு பிடிப்புகள் உருவாகாமல் தடைபடு வது, ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் மிக மோசமான பின்னடைவைச் சந்திக்கும் அபாய நிலை உருவாகிறது.  இந்தியா உட்பட பல நாடுக ளில் சிறு குறு ஆராய்ச்சி நிறுவ னங்களே அறிவியல் ஆராய்ச்சிக ளிலும் கண்டுபிடிப்புகளிலும் முன்னணி வகித்து வரும் நிலை யில், ஜிஎஸ்டி  வரியானது  சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் கொரியா, சிங்கப்பூர், இஸ்ரேல் என அறிவியல் தொழில் நுட்பத்தில் வளர்ந்த முன்னணி நாடுகளுடனான இந்தியாவின் உலகளாவிய போட்டியை பின்னு க்கு இழுக்கிறது. எனவே அறிவி யல் ஆராய்ச்சிகளுக்கு தேவை யான அத்தியாவசியப் பொருட்க ளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.