புதுதில்லி, டிச.26- இந்தியாவில் இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் நடைமுறை யைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருவதாக ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளு நர் மனோஜ் சின்ஹா தெரிவித் துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரில், இந்து மகா சபை நிறுவனர் மதன்மோகன் மாளவியா வின் பிறந்த தின நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டு பேசி யுள்ளார். அப்போது, “இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் நடைமுறைதான் சிறப்பாக இருக் கும். அப்போதுதான் வாரிசு அரசி யல், சாதி அரசியல் நடத்தும் கட்சி களை ஒழிக்க முடியும்” என்று கூறி யுள்ளார். மேலும், இதற்கான பணிகள் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும், அவரைத் தொடர்ந்து தற்போது இருகட்சி முறையைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற ஆட்சிமுறையை ஒழித்துவிட்டு, அனைத்து அதி காரங்களையும் ஒருவரிடம் குவிக் கும் அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பது தான் பாஜக-வின் திட்டமாகும். அதற் கான முயற்சி நடப்பதைத்தான் மனோஜ் சின்ஹா தற்போது வெளிப் படையாக கூறியுள்ளார். “இந்த விஷயத்தில், மதன் மோகன் மாளவியாவின் இந்தியா குறித்த கனவை பிரதமர் மோடி நிறைவேற்றுகிறார். தலித் - பழங்குடி யினர், பிற்படுத்தப்பட்டவா்களின் நலன்களுக்காக அவா் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். எனவே, இந்த விஷயத்தில் கட்சித் தொண்டா்கள் மற்றும் மக்களின் ஆதரவு அவருக்கு முழுமையாகக் கிடைக்கும்” என்றும் மனோஜ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.