திருவனந்தபுரம், பிப்.20- கேரளத்தின் விரிவான மாற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்பு களை நவீனமயமாக்குவதில் அரசு உறுதி யாக உள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அந்த உறுதிப் பாட்டின் பலனாக ஒருங்கிணைந்த உள்ளாட்சித் துறை நடைமுறைக்கு வரும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் துறையை ஒருங்கிணைக்கும் அறி விப்பை முதல்வர் சனியன்று (பிப்.20) வெளி யிட்டார். அப்போது அவர் பேசுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான எல்.டி.எப் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி யும் இதுதான். உள்ளாட்சித் துறை தொடர் பான அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே நோக்கம். கடந்த அரசு இத்துறையை மூன்றாகப் பிரித்தது என முதல்வர் கூறினார்.
“உள்ளாட்சித் துறையை ஒருங்கி ணைக்க மக்கள் விரும்புகின்றனர். கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் - பஞ்சா யத்து துறைகள், ஊராட்சிய ஒன்றிய பஞ்சா யத்துகள் - ஊரக வளர்ச்சித் துறைகள், நக ராட்சிகள் - நிதித் துறைகள் என இந்த துறை யில் பிரிவுகள் இருந்தன. பொறியியல் துறை தலைமைப் பொறியாளரால் ஒருங்கி ணைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், பல்வேறு பிரிவுகளாகச் சிதறிய உள்ளாட்சித் துறை யின் திறன்மிகு செயல்பாட்டிற்குச் சிறிது தடை ஏற்பட்டது.
ஒருங்கிணைப்பதே தீர்வு. இதன் மூலம் பல்வேறு துறைகளின் முழுத் திறனும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும். அந்த வகையில், 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரு துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். நிதிதான் மிக முக்கிய மானது. ஆறாவது நிதிக் குழுவால் முன்மொழியப்பட்ட வளர்ச்சி மானியம், பராமரிப்பு மானியம் மற்றும் பொது நோக்கத்திற்கான மானியம் ஆகியவற்றை அதிகரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டியின் ஒரு பகுதி யாக உள்ளாட்சித் துறை கேளிக்கை வரியை இழக்கிறது. அதை அரசு ஈடுசெய்யும்” என்றார் முதல்வர். அரசின் சேவைகளை பெறுவது குடி மக்களின் உரிமை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. எனவே, குடிமக்கள் உரிமை ஆவணம் வெளியிடப்பட்டு,
அதை செயல்படுத்துவது குறித்த தணிக்கை அறிக்கை கிராமசபைகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் உறுதி செய்வதில் அரசு கடமைப்பட்டிருப்பதாக முதல்வர் கூறினார். நாடு பேரழிவிற்குள்ளான போது கேரளா வில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புடன் செயல்பட முடிந்தது. அவர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது மக்களு டன் சிறப்பாக பணியாற்றினார்கள். இது தொடர வேண்டும். உள்ளாட்சி அமைப்பு களின் செயல்பாடுகளில் எதிர்மறையான அணுகுமுறை இருக்கக் கூடாது. நாட்டின் வளர்ச்சியையே விரும்புகிறோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் முதல்வர் பினராயி விஜயன்.