states

தான உறுப்புகள் கிடைக்காத அவலம்

மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறப்படும்  உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு கிடைக்காத அவலம் உள்ளது. 

தமிழகத்தில் 13 மருத்துவக் கல்லூரிகளில் தான் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதி  கிடைத்துள்ளது. மூளைச்சாவு உடல் உறுப்பு தானங்கள் தமிழ்நாட்  டில் 2008இல் சுகாதாரத்துறை மேற்  பார்வையில் நடைமுறைப்படுத்தப் பட்டது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகள் மூளைச்சாவு  உடல் உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி யாக அரசு சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் உறுப்புகளை தானம்  பெறுவதிலும் பிற நோயாளி களுக்கு. உறுப்புகள் பொருத்து வதிலும் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.  இதுவரை தமிழ்நாட்டில் சிறு நீரகத்திற்கு 97 மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ளன.அதில் 86  தனியாரும் வெறும் 11 அரசு மருத்து வமனைகளும், கல்லீரலுக்கு 49  மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ளன.அதில் 44 தனியா ரும், வெறும் 5 அரசும் பெற்றுள் ளன. கடந்த 15 ஆண்டுகளில் 1650க்கும் மேற்பட்டவர்கள் தான மாக அளித்துள்ளனர். அதில் அரசு  மருத்துவமனைகள் பெற்ற தானங்  களின் எண்ணிக்கை சுமார் 250 மட்டுமே, இதுவே தனியார் 1350க்கும் மேற்பட்டவர்களிடம் தானமாக பெற்றுள்ளனர். சுமார் 9000 உறுப்புகளுக்கு மேல் தனி யார் மருத்துவமனைகளில் வசதி படைத்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. பல லட்  சங்கள் கட்டணமாக பெறப்பட்டுள் ளது என்பது குறிப்பிடதக்கது. பெரும்பான்மையாக வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறலாம் என்ற நிலை உள்ளது. எளிய  நிலையில் உள்ள நோயாளி களுக்கும் தானம் உடல் உறுப்பு களை பெற்றுத்தர அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் மக்களும் வலியுறுத்துகின்றனர்.