states

img

எதிர்க்கட்சியினரின் குடும்பங்களைக் குறிவைப்பது இழிவான அரசியல்...

பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

மும்பை, மார்ச் 26 - ஆட்சிக்கு வரவேண்டும் என்ப தற்காக, எதிர்க்கட்சியினரின் குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்துவது மோசமான அரசியல் என்று பாஜக-வை, சிவசேனா தலைவரும், மகா ராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக் கரே சாடியுள்ளார். 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிர முதல் வர் பதவியை, தங்களுக்குத் தருவ தாகச் சொன்ன பாஜக, பின்னர் ஏமாற்றி விட்டதாக சிவசேனா குற்றம் சாட்டியது. அத்துடன் பாஜக கூட்டணி யிலிருந்து வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ‘மகா விகாஸ் அகாதி’ என்ற கூட்டணியை ஏற்படுத்தி, முதல்வர் பதவியையும் கைப்பற்றியது.  ஆனால், அன்றுமுதல் சிவசேனா வும், அதன் கூட்டணி கட்சி அமைச்சர் களும் மத்திய விசாரணை அமைப்பு களான வருமான வரித்துறை, அம லாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற் றின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். நவாப் மாலிக், அனில் தேஷ்முக் உள்ளிட்ட அமைச்சர்கள் சிறைக்கும் செல்ல வேண்டியதானது. இது பாஜக-வின் பழிவாங்கல் என்று ‘மகா விகாஸ் அகாதி கூட்டணி’

குற்றம்சாட்டினாலும், சோதனைகள், சொத்து முடக்கம் நின்றபாடாக இல்லை. அண்மையில் கூட, உத்தவ் தாக் கரேவின் மனைவி ராஷ்மியின் சகோ தரரான ஸ்ரீதர் மாதவ் பட்டாங்கரின் சொத்துகளின் மீது தொடர்ச்சியான வருமான வரிச் சோதனைகள் நடத்தப் பட்டு, அதன் முடிவில், அவரது சொத்து களில் ரூ. 6.45 கோடியை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது. இது முதல்வர் உத்தவ் தாக்கரே-வை மேலும் ஆவேசமடைய வைத்துள் ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இதுதொடர்பாக காட்டமாகவே அவர் பேசியுள்ளார்.  ‘’நீங்கள் (பாஜக) ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் வாருங்கள். ஆனால், அதிகாரத்துக்கு வர வேண் டும் என்பதற்காக அனைத்து மோச மான விஷயங்களையும் செய்யாதீர்  கள்.. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவ தற்காக அமலாக்கத்துறையை தவ றாக பயன்படுத்துகிறீர்கள். யாருடைய குடும்ப உறுப்பினர்களையும் துன்பு றுத்தாதீர்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்து எப்போதுமே நாங்கள் யோசித்தது இல்லை. அதி காரத்துக்கு வருவதற்காக எங்களைச் சிறையில் தள்ள விரும்புகிறீர்கள் என் றால், என்னை சிறையில் தள்ளுங்கள். அதற்கு நான் அஞ்சமாட்டேன்’’ என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.