புதுதில்லி, மார்ச் 30 - ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜெர்மனியும் தற்போது வெளிப்படை யாக தனது கருத்தை வெளி யிட்டுள்ளது. ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்ட னை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஒன்றிய பாஜக அரசின் திட்டமிட்ட இந்த பழிவாங்கலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மைத் துணைச் செய்தித் தொடர் பாளர் வேதாந்த் படேல், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத் திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படை யாகும். அந்த வகையில், இந்திய நீதி மன்றங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெ ரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று கூறியிருந்தார். “நாங்கள் ஜனநாயகக் கொள்கை களின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் எங்கள் இரு நாடுகளின் ஜனநாயகங் களையும் வலுப்படுத்துவதற்கான திறவுகோலாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெர்மன் அரசின் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித் திருக்கும் ஜெர்மனி வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “இந்தியா வில் எதிர்க்கட்சியை சேர்ந்த அர சியல்வாதிக்கு எதிராக முதல் முறை யாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொண்டு இருக்கிறோம். அவரது, நாடா ளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றி யும் கவனத்தில் எடுத்து உள்ளோம். நாங்கள் அறிந்தவரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூடிய நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என தெரிகிறது. அதன்பின், இந்த தீர்ப்பு நிலையான ஒன்றா அல்லது அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா என்பது பற்றி தெளிவாக தெரிய வரும். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்க விவகாரத்தில், நீதி மன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜன நாயக கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க் கிறது” என்று கூறியுள்ளார். இது மோடி அரசை மிகுந்த கடுப் படையச் செய்துள்ளது. இதுதொடர் பாக செய்தியாளர்களிடம் பேசியிருக் கும் இந்திய ஒன்றிய அரசின் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எந்தவொரு வெளிநாட்டு தூதரும் ராகுல்காந்தி விவகாரம் குறித்து என்னி டம் பேசவில்லை” என்று தெரிவித்து உள்ளார்.