states

img

வாரம் ரூ.6 ஆயிரம் கோடி சம்பாதிக்கும் கவுதம் அதானி!

புதுதில்லி, மார்ச் 17-  ஹுருண் (Hurun) என்பது சீனப் பத்திரிகையாகும். இது ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், உலகப் பணக் காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டிற் கான அறிக்கையை, (Hurun Global Rich List 2022)’ ‘எம்3எம்’ (M3M) என்ற ரியல் எஸ்டேட் குரூப்-புடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி, உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் வரிசையில் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 2021-இல் மட்டும் 20 பில்லியன் டாலர் அதிகரித்து, 103 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ. 7.8 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஹுருண் பட்டியலில், இந்தியா வின் 2-ஆவது பெரும் பணக்காரரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ருமான கவுதம் அதானி, 12-ஆவது இடத்தையே பிடித்துள்ளார் என்றா லும், 2021-ஆம் ஆண்டில் உலகிலேயே  அதிகமாக சம்பாதித்தது அதானி தான் என்று கூறப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் ஒவ்வொரு வார மும் அதானி ரூ. 6 ஆயிரம் கோடியை வருவாயாக ஈட்டியுள்ளார். ஒரே  ஆண்டில் அவரது வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதானி யின் சொத்து சேர்க்கும் வேகம், உல கின் முதல்நிலைப் பணக்காரர் களான எலோன் மஸ்க், ஜெப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகி யோரை விட அதிகமாக உள்ளது என்று ஹுருண் தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவே, உலகப் பணக்காரர் பட்டியலில் 313-ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி, ஒரே ஆண்டிற்குள், 12-ஆவது இடத் திற்கு முன்னேறியுள்ளார்.  

2021-ஆம் ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 153 சத விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதம் (18 மடங்கு) உயர்ந்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 81 பில்லியன் டாலர் (சுமார் 6 லட்சம் கோடி) ஆகும்.

2021-ஆம் ஆண்டில் உலகள வில் பெரும் பணக்காரர்களின் எண் ணிக்கை 3 ஆயிரத்து 381 ஆக உயர்ந் துள்ளது. ஓராண்டில் 153 பேர் பட்டி யலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் கடந்த ஓராண்டில் 58 பெரும் பணக்காரர் கள் உருவாகியுள்ளனர்.  இதன்மூலம் உலகளவில் அதிக மான பெரும்பணக்காரர்கள் இருக் கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. தற்போது இந்தியாவில் 249 பெரும்பணக்காரர்கள் உள்ள னர். இந்தியாவிற்குள் அதிகபட்ச மாக மும்பையில் 72 பெரும்பணக்கா ரர்களும், தில்லியில் 51 பெரும்பணக் காரர்களும், பெங்களூருவில் 28 பெரும் பணக்காரர்களும் உள்ள னர். கடந்த 10 ஆண்டுகளில், இந்திய பெரும்பணக்காரர்கள் தங்களின் மொத்த சொத்தில் 700 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளனர்.

இது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஒட்டு மொத்த ஜிடிபி-க்கு நிகரானது. அதே போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜிடிபி-யை விட இரு மடங்கு அதிகம் என்று ஹுருண் குறிப்பிட்டுள்ளது. இந்திய அளவில் பெரும்பணக் காரர்கள் பட்டியலில் முகேஷ் அம் பானி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அதானியும், மூன்றாவது இடத்தில் எச்.சி.எல். நிறுவனத்தின் ஷிவ் நாடார் (ரூ. 2 லட்சம் கோடி), நான்காவது இடத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி யைத் தயாரித்து வழங்கிய சைரஸ் பூனாவாலா (1.9 லட்சம் கோடி) ஐந்தாவது இடத்தில், லட்சுமி மிட்டல்  (1.8 லட்சம் கோடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ‘சீரம்  இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’வின் தலைவர் சைரஸ் பூனாவாலா, ‘டிமார்ட்’ நிறுவனர் ஆர்கே தாமனி, லட்சுமி மிட்டல் ஆகியோர் உலகள வில் டாப் 100 பெரும்பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள னர்.