புதுதில்லி, நவ. 4 - ‘பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் இல வச உணவு தானிய விநியோகம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி, சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரக் கூட்ட உரையின் போது அறிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலையொட்டி, பல் வேறு இலவச அறிவிப்புகளை பாஜக வெளியிட்டு வரும் நிலையில், பிர தமர் நரேந்திர மோடி, ஒன்றிய அரசு சார்பிலேயே இலவச உணவு தானிய விநியோகம் அடுத்து 5 ஆண்டு களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறி யுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கி ரஸை குறிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகளுக்கு ஏமாற் றத்தைத் தவிர வேறு எதையும் காங்கி ரஸ் வழங்கியதில்லை என்றும் சாடி யுள்ளார்.