states

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு முழு விபரம்

கலக்கத்தில்  வெளிமாநில தேர்வர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துவிதமான போட்டித்தேர்வுகளில் வெளிமாநில தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். அதே போல தற்போதும் நடந்துவிடக்கூடாது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய நடைமுறைகளை அதிரடியாக அரசாணை மூலம் வெளியிட்டுள்ளார். அதில் முதன்மையானது தான் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்கள் யாரும் இனி தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர முடியாது. தமிழ்நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் இந்த அரசாணைக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சிக்கல் 

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் தமிழ் மொழியை 2-ஆம் மொழியாக தான் கற்பிக்கும். சொல்லப்போனால் தனியார் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை அயல்நாட்டு மொழியை போல பார்ப்பார்கள். சில பள்ளிகளில் தமிழ் பாடம் விருப்ப படமாக கூட உள்ளது. கேந்திரியா வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியே கிடையாது. தனியார் பள்ளிகளில் பயின்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மூலம் கடுமையான சிக்கலை சந்திக்க நேரிடும். ஒருவேளை தமிழை கற்க தனியாக பயிற்சி மையம் செல்ல நேரிடும். தமிழ்நாடு அரசின் இந்த அதிரடியால் வரும் காலங்களில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மீண்டும் திருக்குறள் 

குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்படவில்லை. தரங்கள் மாற்றியமைக்கப்பட்டு  மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2022 ஆண்டில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் என அனைத்திலும் அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகும். தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே இனி டிஎன்பிஎஸ்சி தேர்வில் சாதிக்க முடியும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி தகுதித் தேர்வு தொடர்பான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம். 1.தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம். 2.இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற்று தேர்ச்சி பெற வேண்டும். 3.40% மதிப்பெண் பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் குறித்த விபரங்கள்: கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வில் மூன்று விதமான வகைகள் பாடத்திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. விரிந்துரைக்கும் வகை, கொள்குறி வகை, மதிப்பீட்டுத்தேர்வு (கொள்குறி வகை) ஆகிய 3 வகை ஆகும். இதற்காக மாதிரி வினாத்தாள்களும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Tamil/new_syllabus.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.