புதுதில்லி,மார்ச் 12- பெட்ரோல்,டீசல் எரி பொருள் விலை உயர்வு குறித்து ஒன்றிய அமைச்சர வை முடிவு செய்யும் என்று ஒன்றிய இணையமைச்சர் பகவத் காரத் விலை உயர்வு குறித்து சூசகமாக தெரி வித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா வின் ராணுவ நடவடிக்கை யால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு விலை உயர்த்தப்படலாம் என்று அரசியல் கட்சியினர் தெரி வித்து வந்தனர். அதனை நிரூ பிக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலைஉயர்வு குறித்து ஒன்றிய அமைச்சரவை ஆலோ சித்து முடிவு செய்யும்என்றும் பகவத் காரத் தெரிவித்துள் ளார்.