புதுதில்லி, மார்ச் 14- தில்லியின் கோகல்புரியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு பேர் பலியா னார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அனுராக் சக்சேனா, புஷ்பேந்தர் சிங், விக்ரம் ஜீத் பால் மற்றும் ராஜ் குமார் ஆகி யோர் சந்தித்து ஆறுதல் கூறினர். தில்லி கோகல் பூரி மெட்ரோ லைன் பகுதியில் மார்ச் 11-ஆம் தேதி இரவு தீ விபத்து நடை பெற்றது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன. இங்கு வசிக்கும் மக்கள் அனை வரும் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். கட்டுமானத் தொழிலாளர் கள், வீட்டு வேலை, காதுகளை சுத்தம் செய்யும் பணி, காகிதங்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தில்லியில் வசித்து வருகின்றனர். இவர்கள் உத்தரப்பிர தேச மாநிலம் கான்பூரில் வசித்து வந்துள்ளனர்.
வேலை தேடி தில்லிக்கு வந்தவர்கள் ஆவர். பலியான ஏழு பேரில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தீ விபத்தில் குல்சார் என்ப வருக்குச் சொந்தமான காகிதக் கிடங்கு தீ பற்றியதில் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5லட்சம் வரை இழப்பை சந்தித்துள்ளார். வீடுகளை இழந்த மக்கள் அருகிலுள்ள தற்காலிக முகாம் களில் தங்கை வைக்கப்பட்டுள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளன. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவ இடத்தை பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். உயிரி ழந்த பெரியவர்களுக்க ரூ.10 லட்சம், சிறியவர்களுக்கு ரூ.5 லட்சம், குடிசைப் புனரமைப்புக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேவையான உதவி களை செய்யும். நிவாரண உதவி களை உயர்த்தித் தர நடவடிக்கை எடுப்பதாகவும் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதி யளித்தனர்.