புதுதில்லி, ஏப்.6- கொரோனா உயிரிழப்புகளில் எண்ணிக்கை யைக் குறைத்து மோடி அரசு மோசடி செய்துள்ள தாகவும் உரிய மருத்துவம் கிடைக்காமல் 45 சதவீதம் பேர் பலியானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலால் இந்தியாவில் 4.7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலுக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கூறும் தகவலுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. உலகச் சுகாதார அமைப்பு வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 2020- 2021- ஆம் ஆண்டுகளில் 4.7 மில்லியன் மக்கள் நேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ கொரோனா தொற்றால் இறந்திருக்கலாம். 2021 டிசம்பர் நிலவரப்படி கொரோனா மற்றும் அதன் தாக்கத்தால் 4.8 லட்சம் பேர் இறந்துள்ள தாக ஒன்றிய அரசு மதிப்பீடு செய்துள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடு அதிகமாக உள்ளது.
ள்ளது. 2022 மே மாத நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5.2 லட்சமாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 84 சதவீத இறப்பில் மூன்றில் இரண்டு பங்கு உலகளவில் பத்து நாடுகளில் பதிவாகி யுள்ளது. உலகளவில் தொற்றுநோய் பெண்களை விட ஆண்களையே அதிகளவில் பாதித்துள்ளது. (57 சதவீதம் ஆண்கள், 43 சதவீதம் பெண்கள்). மேலும் வயதானவர்களிடையே பரவல் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. 2020- ஆம் ஆண்டு இந்தியாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களில் 5.3 லட்சம் பேரும், 2021- ஆம் ஆண்டு 19 லட்சம் பேரும் இறந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தமட்டில் 2020-ஆம் ஆண்டு 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 3.5 லட்சம் பேரும், 2021- ஆம் ஆண்டில் 15 லட்சம் பேரும் இறந்துள்ளனர். சிவில் பதிவு அமைப்பு (CRS). செவ்வாய்கிழமை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 2019- 2020 ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் (மருத்துவப் பராமரிப்பின்றி) 4.75 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 81.2 லட்சமாக இருந்துள்ளது. ஆனால் ஒன்றிய சுகாதார அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு 1.49 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாகக் கூறியுள்ளது. இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உலகச் சுகாதார நிறுவனம் பயன்படுத்திய “தரவு முறைக்கு எதிர்ப்பு” தெரி வித்த இந்தியாவிற்கு அவர்கள் நேரடியாக பதி லளிக்கவில்லை. ஆனால், இந்திய அரசிடம் தொடர்ந்து பேசிவருகிறோம். இந்திய அரசிட மிருந்து புதிய தரவுகள் கிடைத்தால் புதுப்பிக்கப்படும்” என்றனர். உலக சுகாதார நிறுவனம் தனது மதிப்பீட்டை வெளியிட்ட சில நிமிடங்களில் உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்திய “தரவு முறைக்கு” இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம் மீது பாயும் இந்தியா
இந்தியாவின் ஆட்சேபணை குறித்துப் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியாஸ், “ நாங்கள் வெளியிட்டுள்ள தரவுகள் தொற்றுநோயின் தாக்கத்தை மட்டுமே சுட்டிக் காட்டவில்லை. கொரோனா பரவல் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சுகாதார கட்டமைப்பை வலுவாக்க வேண்டும். இதில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டி யதன் அவசியத்தைத்தான் சுட்டிக்காட்டுகின்றன” எனக் கூறியுள்ளார். கணித மாதிரிகள் அடிப்படையில் அதிகமான இறப்பு கணக்கீட்டு முறைக்கு உலகச் சுகாதார நிறுவனம் மேற்கொண்ட வழிமுறையை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. உலகச் சுகாதார நிறுவனம் இந்தியா கூறும் தகவல்களை கவனத்தில் கொள்ளாமல் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ள தாக கணக்கிட்டுள்ளது.
புள்ளியியல் ரீதியாக ஆதாரமற்றது
இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) மூலம் சிவில் பதிவு அமைப்பு (CRS) வெளியிட்ட உண்மைத் தரவுகளைக் கொண்டு, இந்தியாவின் இறப்பு எண்ணி க்கையை கணிக்க கணித மாதிரிகளைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ள இந்தியா, நாட்டிலுள்ள 17 மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட இணையதளத் தகவல்கள் குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவல் புள்ளியியல் ரீதியாக ஆதாரமற்றது. விஞ்ஞான ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பு கிறது. உலகச் சுகாதார அமைப்புடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்திய அரசு எப்போதும் தயாராகவே உள்ளது என்கிறது. அறிவியல் அடிப்படையின்றி சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்துவது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்புகளின் எண்ணிக்கை “யதார்த்தமாக” இல்லை. இந்தியாவின் எண்ணிக்கைக்கும் உலகச் சுகாதார அமைப்பின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவை உலகிலுள்ள சிறிய நாடுகளுடன் ஒப்பிட முடியாது, அங்கு பயன்படுத்தப்படும் கணித மாதிரியை இந்தியாவிற்கு பயன்படுத்த முடியாது என்கிறது ஒன்றிய சுகாதார அமைச்சகம். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை யில் உள்ள விவரங்கள் உண்மையான அறிக்கை வெளியாவதற்கு முன்பு பத்திரிகைகளுக்கு எப்படி “கசிந்தது” என்றும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
சுகாதாரத்தை புறக்கணிக்கும் மோடி
இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப் படுத்துவதில் மோடி தலைமையிலான அரசு படுதோல்வியடைந்துவிட்டது. 2011-ஆம் ஆண்டு பல் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் (மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமல்) 10 சதவீதம் பேர். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமல் 45 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றிய அரசு பொது சுகாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது ஐந்து சதவீதத்தையாவது செலவழிக்க வேண்டும்.