states

img

முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!

திருவனந்தபுரம்,  நவ. 23 - தமிழக முன் னாள் ஆளுநர் பாத்திமா பீவி கால மானார். அவருக்கு வயது 96. முதுமை சம்பந்தமான உடல் நலக் குறைவால், கேரள மாநிலம் கொல்லம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில், வியாழனன்று நண்பகல் பாத்திமா பீவி காலமானார். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா ராவுத்தர் குடும்பத்தில் 1927 ஏப்ரல் 30 அன்று, அன்னவீட்டில் மீரா சாகிப் - கதீஜா பீவி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவரான பாத்திமா பீவி, 1950-ஆம் ஆண்டு சட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, வழக்கறி ஞராக தனது வாழ்க்கையைத் துவக்கியவர் ஆவார். கேரளாவின் கீழ்நிலை நீதித்துறை யில் தனது பணியைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, இந்திய உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக நிய மிக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண், 1989-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் நீதிபதி என்ற பெருமைகளைப் பெற்ற அவர்,  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும், 1997 முதல் 2001 வரை  தமிழ்நாடு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றியவர். 2023-இல், கேரள அரசு அவருக்கு ‘கேரள பிரபா’ விருது வழங்கி சிறப்பித்தது. இந்நிலையில், பாத்திமா பீவி வியாழனன்று பகல் 12 மணியளவில் கால மானார். அவரது மறைவுக்கு அரசியல்  தலைவர்கள் பலரும் இரங்கல் தெரி வித்துள்ளனர். முதல்வர்  இரங்கல் :  “தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா  பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன். பாத்திமா பீவி அவர் களது மறைவால் வாடும் குடும்பத்தின ருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் இரங்கல்
 

நீதிபதி பாத்திமா பீவியின் வாழ்க்கை மலையாள பெண்கள் இயக்க வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கூட கடினமாக இருந்த காலகட்டத்தில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்த அவர், நீதித்துறையின் மதிப்புமிக்க பதவிகளை முன்சீப் முதல் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி வரை அலங்கரித்தார். சமூகச் சூழல்களின் எதிர்மறைக் காரணிகளால் உடைந்து போகாமல் சவாலாக கொண்டு அவற்றை முறியடிக்கும் தனித்துவமான ஆற்றல் பாத்திமா பீவியிடம் இருந்தது. இது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கிறது. கேரளத்தின் நற்பெயரை பல வழிகளில் உயர்த்திய மாபெரும் ஆளுமைக்குச் சொந்தக்காரர் பாத்திமா பீவி. அவர்களின் மறைவு நமது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.  உறவினர்களின் துயரில் தானும் பங்கு கொள்கிறேன் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.