states

img

ஜெனரல் நரவனேயின் புத்தகம்

இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் நரவனே. இவரது காலத்தில் தான் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன ராணுவ மோதல்  நடந்தது. இவரது காலத்தில் தான் அக்கினிப் பாதை ஒப்பந்த முறையிலான ராணுவ ஆளெடுப்புத் திட்டம் துவங்கப்பட்டது. ஜெனரல் நரவனே, “நான்கு நட்சத்திரங்களின் தலைவிதி (Destiny of Four Stars)” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அதில் அக்கினிப் பாதை திட்டம் பற்றி பூகம்பத்தை கிளப்பும் பல்வேறு விவரங்களை கூறி யுள்ளார்.அதில், எவ்வாறு இந்தியாவின் முப்படைத் தலைவர்களும் மோடி அரசின் அக்கினிப்பாதை திட்டத்தால் திகைத்துப் போனார்கள் என்பதையும், தளபதிகளின் கருத்துகள் மோடி அரசால் எவ்வாறு அலட்சியப்படுத்தப்பட்டன என்பதையும் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தத் திட்டத்தை அவர்களை வைத்தே புகழ வைத்தது மோடியின் அரசு.  இத்தனைக்கும் அப்போது பல மாநிலங்களின் இளைஞர்கள் அக்கினிப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தளபதிகள் திட்டத்தை ஆதரித்துப் பேசினர். ஆயுதம் தாங்கிய படைகளின் தளபதிகளின் பரிந்துரைகளை மோடியின் அரசு அலட்சியம் செய்துள்ளது. மோடி ராணுவத்தை எப்படி  பயன்படுத்திக் கொண்டார்; அக்கினிப் பாதையால் ராணுவம் பல வீனப்படும் என்றாலும் ராணுவத் தளபதிகள் அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. இதையெல்லாம் ஜெனரல் நர வனே, தனது ஓய்விற்கு பின்னர் தைரியமாக தமது நூலில்  கூறியுள்ளார். இந்தப் புத்தகம் கடந்த ஜனவரி 15-ல் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் புத்தக வெளியீட்டு விழா ஏப்ரல் 30க்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்போது 2024 நாடாளுமன்ற தேர்தல்  முடிந்து போயிருக்கும்.