states

img

பாஜகவை அகற்றினால் அதுதான் 1947-ஐ விட பெரிய சுதந்திரம்!

ஜம்மு, ஜன.19- “உத்தரப்பிரதேசத்தில் பாஜக வை ஆட்சியிலிருந்து அகற்றினால், 1947-இல் நாடு பெற்ற சுதந்திரத்தை விட பெரிய சுதந்திரமாக அது இருக் கும்!” என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். “ஜம்மு - காஷ்மீர், மகாத்மா காந்தி தலைமையிலான இந்தியா வுடன்தான் இணைந்துள்ளது. எனவே, இந்த நாட்டை மகாத்மா வின் கொலையாளியான நாதுராம் கோட்சேவின் தேசமாக மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்”  என்றும் மெகபூபா சூளுரைத்துள் ளார். மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பழங்குடி இளைஞர்களின் மாநாடு ஜம்மு-வில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மெகபூபா முப்தி உரையாற்றியுள்ளார். அப் போது மேலும் அவர் பேசியிருப்பதா வது: பாஜகவினர் நாட்டை நாச மாக்கி விட்டனர். தற்போதைய சூழ் நிலையில், ஒவ்வொரு நபரும் பாது காப்பற்றதாக உணர்கின்றனர்.

நாளை உயிருடன் இருப்போமோ, இல்லையோ? என்ற அவநம்பிக்கை யில் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் பிற அரசாங்க அமைப்புகளின் கைது கள் மற்றும் சோதனைகள் வரிசை யாக தாக்குதல் நடத்துகின்றன. அதி லும், நாட்டின் மற்ற பகுதிகளை விட ஜம்மு மற்றும் காஷ்மீரின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசம டைந்து கொண்டே செல்கிறது. 2019-இல் பாஜக அரசானது, 370-ஆவது பிரிவைத் திரும்பப் பெற்று, ஜம்மு - காஷ்மீரில் வெளியாட்கள் நிலம் வாங்குவதற்கு வழி வகுத்தது. காஷ்மீரிகளின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்கு தலை எதிர்த்து நாம் போராடினோமா  அல்லது சரணடைந்தோமா? என் பதை எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு வரவிருக்கும் நமது இளைய தலை முறையினர் அறிய விரும்புவார்கள். கேள்வி எழுப்புவார்கள். எனவே, நாம் அமைதியாக இருந்தால், எது வும் நடக்காது. ஹரித்துவார் மாநாட்டில் பேசிய வர்கள், முஸ்லிம்களை இனப்படு கொலை செய்ய வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர். ஆனால், பாஜக தலைமை அமைதியாக இருக்கிறது. உ.பி.யில் சட்டப்பேர வைத் தேர்தல் நடக்க உள்ளதால், இப்போது அவுரங்கசீப்பையும், பாப ரையும் நினைவு கூர்கிறது. பாஜகவுக்கு எதிராக யாராவது பேசினால், அவர்கள் இந்துக்களை யும், தேசத்தையும் துஷ்பிரயோகம் செய்வதாகக் கூறுகின்றனர்.

அவ் வாறு சொல்லும் பாஜகவினர் ஒன் றும் இந்துக்களுக்கும் இந்த நாட் டிற்கும் பிதாமகன்கள் அல்ல.  இன்று பயந்தால், நாம் இறந்து விட்டோம் என்று அர்த்தம். நாம் நமது கால்களை மண்ணில் உறுதி யுடன் ஊன்றி போராடுவோம். பாஜக வின் ‘கையை முறுக்கும் தந்திரங்க ளுக்கு’ பயப்படக் கூடாது. நமது மதம், ஜாதி எதுவாக இருந்தாலும் காஷ்மீரிகள் ஒன்றுபட்டு நின்று சவால்களை எதிர்கொள்ள வேண் டும். இலக்குகளை அடைய வன் முறை, துப்பாக்கிகள் அல்லது கற் களுக்கு இடமில்லை. அன்பையும் நட்பையும் பரப்புவதன் மூலம் அவர்களை எதிர்க்க வேண்டும். வரலாறு ஒரு பங்கை வகிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. முன்பு இந்திய மக்கள் இதேபோன்ற வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கி லேயர் ஆட்சியில் இருந்து நாட்டை விடுவித்தனர். அதேபோல இன்று நாமும் விடுதலை பெற ஒரு வாய்ப்பு உள்ளது. பல்வேறு சமூ கங்களிடையே வெறுப்பு விதை களை விதைத்து, நாட்டை துண் டாடத் துடிக்கும் பாஜக-வை அகற்றினால், 1947 பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை விட மிகப் பெரி யதாக அது இருக்கும். இவ்வாறு மெகபூபா முப்தி பேசி யுள்ளார்.