states

img

லாலு கவலைக்கிடம்

பாட்னா, ஜூலை 7-  பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலை வருமான லாலு பிரசாத் யாத வின் உடல்நிலை மிகவும் கவ லைக்கிடமான நிலையை எட்டி உள்ளது. செவ்வாயன்று லாலு  பிரசாத் யாதவ், தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டை யில் எலும்பு முறிவும் காய மும் ஏற்பட்டது. உடனடி யாக அவரை பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவ மனைக்கு சென்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத்தின் மனைவி யிடம் உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக கேட்ட றிந்தார். சிறிது நேரத்தில் லாலு வுக்கு உடல்நலம் மோச மானதால் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விமான நிலையத்தில் லாலு வை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சென்று  பார்த்தார். மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ள லாலு வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து லாலு மகன் தேஜஸ்வி யிடம் பிரதமர் மோடி கேட்ட றிந்தார். லாலு பிரசாத்தின் உடல்நிலை மிகவும் மோச மான கட்டத்தை எட்டி யுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்த அழுத்த மாறுபாடு, கூடுதல் சர்க்கரை பிரச்சனையால் லாலு அவதிப்பட்டு வருகிறார்.