கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளியன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந் திப்பில் பாஜக முன் னாள் எம்.பியும் நடிக ருமான சுரேஷ் கோபிக்கு அருகில் நின்ற ஒரு பெண் செய்தியாளர் கேள்வி கேட்க, அதற் குப் பதில் சொல்லும் போது அவரது தோளின் மீது கைவைத்துப் பேசியுள் ளார். சுரேஷ் கோபியின் கையை இரண்டு முறை அந்த பெண் செய்தியாளர் தட்டி விட்ட போதும் கூட அவரை அருகே இழுத்து கை வைத்து மீண்டும் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் சுரேஷ் கோபி. இந்த விவகாரத்தை பத்திரிகையா ளர்கள் சிலர் கேள்வி கேட்க முயன்ற பொழுது அந்த இடத்தை விட்டு சுரேஷ் கோபி நழுவி விட்டார். இந்நிலையில், சுரேஷ் கோபியின் இந்த அநாகரிக மான செயல் குறித்து கேரள பத்திரிகையா ளர்கள் சங்கம் அளித்த புகாரின் பேரில், கோழிக்கோடு காவல் துறையினர் வழக் குப் பதிவு செய்துள்ளனர். தன்னிடம் அநா கரீகமாக நடந்து கொண்ட சுரேஷ் கோபி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக பாதிக்கப்பட்ட பெண் நிருபர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.