புதுதில்லி, ஜூன் 11- நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 288 பேர் பலி யாகினர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி மற்றும் சோகத்திற்கு உள் ளாக்கியது. விபத்து நடந்த பகுதி யில் அமைந்துள்ள பகனகா பஜார் ரயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதி காரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்நிலையில் ரயில் நிலையங்க ளில் அமைந்துள்ள ரயில் கட்டுப் பாட்டு அமைப்புகள், லெவல் கிரா சிங்களுக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள், சிக்னல் அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறை களுக்கு இரட்டைப்பூட்டு முறையை பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பு அடங்கிய ரிலே அறையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்தே பாதுகாப்பை அதிகரிக் கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம ளித்துள்ளனர்.