states

img

கேரளத்தை வஞ்சிக்கிறது மோடி அரசு

மாநிலத்தை ஒன்றிய அரசு பெரிதும் திண றடித்து வருவதாக கேரள சட்டப்  பேரவையில் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரி வித்தார். கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு மத்திய ஒதுக்கீட்  டில் பெரும் சரிவு ஏற்பட்டுள்  ளது. பல மாநிலங்கள் செல வினத்தில் 40 சதவிகிதத்தை தாங்களே ஏற்கின்றன. 60 சத விகிதத்திற்கு ஒன்றிய அரசை நம்பியிருக்கின்றன. ஆனால் கேரளம் 70 சதவிகிதத்தை ஏற்கி றது. மத்திய பங்கு வெறும் 30 சதவிகிதம் மட்டுமே. ஒன்றிய அரசு கடன் வாங்கும்  வரம்பை அதிகரிக்காத நிலை யில், மாநிலம் தனது சொந்த  வரி மற்றும் வரி அல்லாத வரு வாயை அதிகரித்து, தேவை யற்ற செலவினங்களைக் குறைத்து, வளர்ச்சி மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக் கான ஆதாரங்களைத் திரட்டும்  நிலையில் உள்ளது. நிதி ஆயோக் நிர்ணயித்த கடன் வரம்பின் அடிப்படையில் பட் ஜெட் தயாரிக்கப்படுகிறது. ஆனால், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய நிறுவனம் மற்றும்  கி்ப்ஃபி மூலம் வாங்கிய கடனை  மாநிலத்தின் கடனாக சேர்த்து, கடன் வாங்கும் வரம்பை ஒன்றிய அரசு குறைத்து வரு கிறது. இது பட்ஜெட்டில் குறிப்பி டப்பட்டுள்ள மாநிலத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமை களை சீர்குலைக்கும். மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து கேர ளத்தின் பங்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.  1980-85இல் 3.95 சதவிகிதமாக இருந்தது, தற்போது 1.92 சத விகிதமாக உள்ளது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தியதாலும், வளர்ச்சி ஆதாயங்களாலும், கேரளாவின் பங்கு குறைந்துள் ளது. அறிவியலற்ற தரநிலை கள் அமைப்பதால் இத்தகைய பாகுபாடு ஏற்படுகிறது. வரிப்  பங்கீட்டை நிர்ணயிக்கும் அளவு கோலில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேரளம் கோரி யுள்ளது என்றும் அமைச்சர் கூறி னார்.