states

மணிமுத்தாறு அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை-மகன் பலி

திருநெல்வேலி, அக். 29 - மணிமுத்தாறு அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற தந்தை-மகன் ஆகி யோர் வனவிலங்குகளை வேட்டை யாட வைத்த மின்வேலியில் சிக்கி பலியாகினர். நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியை அடுத்த மணிமுத்தாறு அருகே உள்ள  அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (55). இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், வனராஜ் (28) மற்றும் சரவணன் ஆகிய 2 மகன்களும் உள்ள னர். வனராஜிக்கு திருமணமாகவில்லை.  இவர்களுக்கு சொந்தமான வயல் மணிமுத்தாறு 40 அடி கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இந்நிலையில் வயலில் போட்டி ருந்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவ தற்காகவும், காட்டு விலங்குகளிடம் இருந்து பயிரை பாதுகாக்க காவல் பணிக்காகவும் சனிக்கிழமையன்று இரவு 10.30 மணியளவில் பேச்சி முத்து தனது மகன் வனராஜை அழை த்துக் கொண்டு வயலுக்குச்சென்றார்.  

இந்நிலையில் அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமையன்று அங்குள்ள வயலை ஒட்டிய ஓடையில் இறந்து கிடந்தனர். இதனை சிலர் பார்த்து பேச்சிமுத்து குடும்பத்தினருக்கு தக வல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மணிமுத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேர் உட லையும் மீட்டு நெல்லை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இரவு  நேரங்களில் வயலுக்கு வனவிலங்கு கள் வருவதை அறிந்து கால்வாயில் வைத்து அவற்றை வேட்டையாடு வதற்காக சிலர் மின்வேலி அமைத்துள் ளனர். அந்த வேலிக்கு மின்சாரம் பாய்ச்ச, அருகில் சென்ற தாழ்வழுத்த மின்கம்பியில் அந்த மர்ம நபர்கள் கொக்கி போட்டு வயர் மூலமாக மின்சா ரம் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அறியாத பேச்சி முத்துவும், வனராஜூவும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது, மின்வேலி யில் தண்ணீர் பட்டு, மின்சாரம் பாய்ந்து  அவர்கள் பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.