புதுதில்லி, ஜுன் 21- இடதுசாரி அரசை ஆட்சிக்கு கொண்டு வந்த கொலம்பிய மக்களை அகில இந்திய விவசாயிகள் சங்கம் பாராட்டியுள்ளது. கொலம்பியாவின் தேர்தல் முடிவு, நவீன தாராளவாத வளர்ச்சி மாதிரிக்கும், லத்தீன் அமெரிக்க மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் அமெரிக்காவிற்கும் பெரும் பின்னடைவாகும். கொ லம்பியா அமெரிக்க வல்லரசுக ளால் இதுவரை ஆளப்பட்டது. முதலாளித்துவ ஆதிக்கத்திலும் போதைப்பொருள் மாபியாக்க ளின் பிடியிலும் அந்நாடு இருந்தது. கடந்த ஆண்டு, சிலி, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இடதுசாரி அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா தேர்தலுக்கு முன் நடந்த கருத்துக் கணிப்பில் முதலிடம் பிடித்துள்ளார். இடதுசாரிகளின் கொள்கைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.