states

img

விழிஞத்தில் முதல் கப்பல் டிசம்பரில்

புதுதில்லி, மே 7- திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞம் துறை முகம் தொடர்பான ரூ.1,050 கோடி திட்டத்திற்கான டிபிஆர் தேசிய சாகர்மாலா அபெக்ஸ் கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரிவித்தார். விழிஞம் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாடு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப் படும். டிசம்பரில் முதல் கப்பலை விழிஞத்துக்கு கொண்டு வர மாநில அரசு முயற்சித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார். பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2039 கோடி மதிப்பிலான வெளிப்புற வழித்தட பழுதுபார்த்தலுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேப்பூர் துறைமுக ரயில் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.155 கோடிக்கான டிபிஆர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மிதக்கும் படித்துறைகள் கட்டுவதற்கான செலவை ஒன்றிய அரசு ஏற்கும்.

கொல்லம் துறைமுகத்தின் இயற்கை ஆழத்தை 9-லிருந்து 12 மீட்டராக அதிகரிக்க ரூ.111 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும், பேப்பூர் துறைமுகத்தின் இயற்கை ஆழத்தை 6 மீட்டராக உயர்த்த ரூ.70 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் டிபிஆர் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. பேப்பூரில் பெர்த் அமைப்பதற்கு சென்னை ஐஐடி ரூ.36 கோடி மதிப்பிலான டிபிஆர் தயா ரித்துள்ளது. இங்கு சாலை போக்குவரத்தை எளிதாக்க ரூ.261 கோடி மதிப்பிலான திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. பொன்னானி துறைமுக வளர்ச்சிக்கு திட்டமிடப் பட்டுள்ளது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் நீண்டகரை மற்றும் கொடுங்கலூரில் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். கொல்லத்தில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் பிரிவுக்காக மிதக்கும் உலர் கப்பல்துறைக்கான டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருகி றது. ஆலப்புழா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலாத் திட்டத்துக்கு விரைவில் டிபிஆர் தயாராகும் என்றார். தில்லியில் நடந்த சாகர்மாலா உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் அமைச்சரைத் தவிர, துறை முகச் செயலாளர் டிங்கு பிஸ்வால், கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை, விழிஞம் சர்வ தேச துறைமுக நிர்வாக இயக்குநர் கோபாலகிருஷ் ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அமைச்சர் அகமது தேவர்கோவில், ஒன்றிய துறைமுக அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் துணை நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோரை சந்தித்து பேசினார்.