states

img

ஆர்.எஸ்.எஸ்சுடன் சேர்ந்து கேரள காங்கிரஸ் சதி நாடகம்: முடிவுக்கு கொண்டுவர எம்.ஏ.பேபி வேண்டுகோள்

திருவனந்தபுரம், ஜுன் 13- நமது நாட்டின் ஜனநாயகம் பெரும் சவாலை எதிர்கொள்ளும் போது, காங்கிரசுக்கு அதிக எம்.பி.க்களை கொடுத்த கேரளாவில் ஆர் எஸ் எஸ்ஸுடன் சேர்ந்து சதி செய்து அவர்களுடன் தெருவில் இறங்குவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என முகநூல் கடிதம் மூலம் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கேட்டுக் கொண்டுள்ளார். அவரது முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: அன்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் திரு.வி.டி.சதீசன் அவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், இந்திய ஜனநாயகம் இன்று எதிர்கொள்ளும் நெருக் கடியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கி றேன். இந்த நேரத்தில் கேரளாவில் உங்கள் தலைமை யில் உள்ள காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்-இன் கைப்பாவை யாக இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-இன் கைப்பாவையான பெண் (சொப்னா) சொல்வதை ஏற்று, கேரள முதல்வர் பினராயி விஜய னைத் தெருவில் இறங்கித் தாக்குவதுதான் உங்கள் அரசியல் கடமையா?

கலவரம் மூலம் அதிகாரம்

2025 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட 100ஆவது  ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த அரை-பாசிச  போராளிகள் ஆர்எஸ்எஸ் இலக்கான இந்து ராஷ்டிராவை  அடைவதில் பெரிய நடவடிக்கைகளை எடுப்பதில் ஆர்வ மாக உள்ளனர். ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகின்றனர். இந்தியாவின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கல்லான மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை ஒழிப்பதில் அவர்கள் நீண்ட தூரம் சென்றுள்ளனர். காங்கிரஸ் அரசின் மறைமுகமான ஒப்புதலுடன், அவர்கள் பாபர் மசூதியை இடித்து, இந்திய மக்களை மத அடிப்படையில் பிரித்தனர். அதன்பிறகு நடந்த அனைத்து வகுப்புவாத கலவரங்களும் ஆர்எஸ் எஸ் தனது குறுகிய அரசியல் பார்வையை பரப்ப பயன் படுத்தியது. குஜராத் கலவரம் உள்ளிட்ட படுகொலை கள் மூலம் பாஜக இந்தியாவில் ஆளும் கட்சியாக மாறியது. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தினர். குடி உரிமைகளில் சிறு பான்மையினரை பாகுபடுத்தினர். மத சிறுபான்மையினர், மனித உரிமை ஆர்வலர்கள், தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் பாதுகாப்பின்மைக்கு உள்ளாகிறார்கள். வழி பாட்டுத்தலங்களை இடித்து இரத்தக்களரியை ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் திட்டமிடுகின்றனர். ஒருங்கி ணைந்த குடியுரிமைச் சட்டத்தை திணிப்பதன் மூலம் சிறுபான்மையினர், ஆதிவாசிகள் மற்றும் பிற விளிம்பு நிலை மக்களின் சமூக வாழ்க்கையை குற்றமாக்க முயற்சிக்கின்றனர்.

இந்தியாவின் பொருளாதார நிலை, மன்மோகன் சிங் சொன்னது போல் ஓடும் காரின் சக்கரத்தை சுட்டு  பஞ்சர் ஆக்கியது மோடி ஆட்சிதான். கட்டுக்கடங்காத பணவீக்கத்தாலும், இதுவரை கண்டிராத வேலையில்லா திண்டாட்டத்தாலும் நாடு திணறுகிறது. இந்த நேரத்தில் இஸ்லாம் நபியை இழிவுபடுத்தி, தூண்டிவிட்டு நாட்டின் உடனடிப் பிரச்சனையை இந்து-முஸ்லிம் பிரச்சனை யாக மாற்ற சங்பரிவார் சதி செய்கிறது. இதை எழுதும் நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) இல் உள்ள ஜேஎன்யு மாணவர் சங்க தலைவரின் வீடு புல்டோசர் மூலம் தகர்க்கப்படுகிறது. பாகுபாடுக்கு எதிராக செயல்பட்ட குற்றத்திற்காக விசாரணை இல்லா மல் தண்டனை நிறைவேற்றப்படுகிறது!. நமது நாட்டின் ஜனநாயகம் இந்த சவாலை எதிர்கொள்ளும் போது, காங்கிரசுக்கு அதிக எம்.பி.க்களை கொடுத்த கேரளாவில் காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கி றது? நீங்கள் அரை பாசிச ஆட்சிக்கு எதிரான சக்தியாக இருப்பீர்கள் என்று தவறாக நம்பி இருபதுக்கு 19 எம்.பி.க்கள் உங்கள் முன்னணிக்கு கொடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் சேர்ந்து சதி செய்து அவர்களுடன் சேர்ந்து தெருவில் இறங்குகிறீர்கள். கேரளத்தின் உயர்ந்த அரசியல் உணர்வு குறித்து ஏதேனும் மதிப்பு இருந்தால், இதுபோன்ற அவலங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், முதல் கடமையாக ஆர் எஸ்எஸ்-க்கு எதிராகப் போராடுவதே இருக்க வேண்டும் என கடிதத்தில் எம்.ஏ பேபி கேட்டுக்கொண்டுள்ளார்.