ஸ்ரீநகர், ஜூன் 26 - புல்வாமாவில் உள்ள மசூதி ஒன்றில் நுழைந்த ராணுவத்தினர், அங்கிரு ந்த முஸ்லிம்களை ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என கோஷமிட வலி யுறுத்தியதாக மெகபூபா முப்தி குற்றச்சாட்டு எழுப்பி யுள்ளார். இதுதொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல் வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெக பூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: “புல்வாமாவில் உள்ள மசூதியில் முஸ்லிம்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பும்படி 50 ஆர்.ஆர். ராணுவத்தினர் (Rash triya Rifles), நிர்ப்பந்திப்ப தைக் கேட்டு அதிர்ச்சியடை ந்தேன். இது அமித்ஷா இங்கு (காஷ்மீரில்) இருந்த போது, அதுவும் யாத்தி ரைக்கு முன்பாக நடந்து இருப்பது ஆத்திரமூட்டும் செயலாகும். இதுபற்றி உட னடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ராஜீவ் காயை கேட்டுக்கொள் கிறேன்” என தெரிவித்துள் ளார். இதில், மெகபூபா முப்தி குறிப்பிட்ட ராஜீவ் காயி ராணுவ அதிகாரியாவார். ராணுவத்தில் லெப்டி னெண்ட் ஜெனரலாக இருக்கும் ராஜீவ் காய், அண்மையில்தான் ஸ்ரீநக ரைத் தளமாககொண்ட சினார் கார்ப்ஸின் தளபதி யாக பொறுப்பேற்றார்.
இவர், காஷ்மீரில் பயங்க ரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பிரச்சனை தொடர் பான பணிகளுக்கு பொறுப் பானவர் ஆவார். இவரிடம் தான், விசாரணை நடத்து மாறு மெகபூபா முப்தி கோரிக்கை வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தான், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமித்ஷா தொடங்கிவைத் தார். அத்துடன் ஒன்றிய பாஜக அரசின் 9-ஆவது ஆண்டு வெற்றிவிழா பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றார். அதன்பிறகு ஸ்ரீநகரில் உள்ள ராஜ் பவனில், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் ராணுவம், போலீஸ், துணை ராணுவப் படைகள் மற்றும் புல னாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, தில்லி திரும்பினார். இந்நிலையில், ஆர்.ஆர். ராணுவத்தினர் எனப்படும், ‘ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்’ படை யினர், மசூதியிலுள்ள முஸ்லிம்களை, ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச்சொல்லி மிரட்டி யதாக மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.