ஆர்எஸ்எஸ், சங்பரிவார் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா மைசூர் பல்கலைக்கழ கத்தின் வெள்ளி விழா கொண் டாட்டத்தின் போது பேசுகையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் குறித்து மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். அம்பேத்கரையும், அவர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் வரலாற்று ரீதியாக எதிர்த்தவர்களுடன் நீங்கள் ஒருபோதும் சேரக் கூடாது. சரி யானவர்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். சமூக மாற் றத்திற்காக நிற்பவர்களுடன் நில்லுங் கள். சமூக மாற்றத்தை எதிர்ப்பவர்களு டனோ அல்லது சனாதனிகள் உடனோ சேராதீர்கள். ஒரு சனாதனி, இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய செயல், சனாதனிகளும் பழமைவாதி களும் இன்னும் சமூகத்தில் இருக்கி றார்கள் என்பதைக் காட்டுகிறது. தலித்து கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டும். அப் போதுதான் சமூகம் மாற்றத்தின் பாதை யில் செல்கிறது என்று நம்மால் சொல்ல முடியும். ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரி வார் அம்பேத்கரின் அரசியலமைப்பை எதிர்த்தனர்; இன்றும் எதிர்த்து வரு கின்றனர். எனவே, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அவர் கூறி னார்.