கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.187.3 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து 2024ஆம் ஆண்டு மே மாதம் ஆணை யத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பின்பு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நடந்த சிறப்பு புல னாய்வு பிரிவு விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அம லாக்கத்துறை அதிகாரிகள் நாகேந்தி ராவை கைது செய்தனர். இந்நிலையில், புதன்கிழமை அன்று பெல்லாரி காங்கிரஸ் மக்களவை உறுப்பி னர் துக்காராம், பெல்லாரி நகர காங்கி ரஸ் எம்எல்ஏ நாரா பாரத் ரெட்டி, காம்ப்ளி காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மற்றும் பெல்லாரி கிராமிய எம்எல்ஏ நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளி கோவர்தன் ரெட்டி ஆகியோரின் வீடு களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. வால்மீகி ஊழல் தொடர்பான பணமோசடி விசாரணை யின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.