நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வியாழனன்று மாநி லங்களவையில் மகளிர்க்கான இடஒதுக்கீடு தொடர்பான சட்ட முன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவைக் குழுத் தலைவர் எளமரம் கரீம் பேசியதாவது: இந்தச் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆத ரிக்கிறேன். பெண்களுக்கு அதிகாரங்களை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்திருப்பதாக பிரதமர் கூறினார். கிடையவே கிடை யாது. ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம். ஏனெனில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அவர்கள் அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். கர்நாடகா வில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது என்னதான் அவர்கள் பிரச்சாரம் செய்தபோதிலும், பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்தார்கள். அவர்கள் இமாசலப்பிரதேசத்தை இழந்துள்ளார்கள். தில்லி மாநகராட்சியை பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து வைத்திருந்தபின் இப்போது அதனை யும் இழந்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலைதான் இவர்களை இந்தச் சட்டமுன் வடிவைக் கொண்டுவர நிர்ப்பந்தித்துள்ளது.
உறுதியான முயற்சி
இவர்களுக்கு மகளிர் மீது ஏற்பட்ட கருணையால் அல்ல. 2010இல் ஐமுகூ அரசாங்கம் மாநிலங்களவையில் இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி, அது நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, எங்கள் கட்சி யின் தலைவர் பிருந்தா காரத் மற்றும் பெண் உறுப்பினர்கள் இதனை ஆதரித்து, நிறைவேற்றினார்கள். அப்போது பிருந்தாகாரத் பேசியதை மேற்கோள் காட்டவிரும்புகிறேன். “இந்தச்சட்டமுன்வடிவிற்கு அப்போதைய ஐமுகூ அரசாங்கத் தின் தலைவர் சோனியா காந்தி அளித்த ஆதரவு இது நிறைவேற்றப்படுவதை உத்தரவாதப்படுத்தி, இதற்கெதிரான நாச வேலைகளைத் தடுத்து நிறுத்தியது.” இந்தச் சட்டமுன்வடிவு அப்போது மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு மாநி லங்களவைத் தலைவராக இருந்த ஹமித் அன்சாரி உறுதியான நிலைபாட்டினை எடுத்தார். பல பத்தாண்டு காலமாக மாதர் அமைப்புகள் மேற்கொண்டுவந்த வலுவான, ஒன்றுபட்ட, தொடர் போராட்டங்களே இதற்குக் காரணமாகும். ஆயினும், துரதிஷ்டவசமாக, இந்தச் சட்டமுன்வடிவு மக்களவையில் நிறைவேறவில்லை. 2014இல் நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாஜக, மகளிர்க்கான இடஒதுக்கீடு சட்டமுன்வடிவைக் கொண்டுவருவோம் என்று உறுதி அளித்தது. ஆயினும் எதுவும் நடைபெறவில்லை.
எங்கே போனது உங்கள் பெண்கள் சக்தி
2019இல் இதே உறுதிமொழியை மீண்டும் அவர்கள் கூறினார்கள். நான்காண்டு கள் ஓடிவிட்டன. இவ்வாறு உங்கள் ஆட்சியில் இதனை நிறைவேற்றாமல் ஒன்பது ஆண்டு காலம் வீணடித்துவிட்டீர்கள். இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இப்போது பெண்கள் சக்தி குறித்து பேசத் தொடங்கியிருக்கிறீர்கள்.எந்தப் பெண்கள்? மணிப்பூரில் பெண்களின் நிலை என்ன? ஏழைப் பெண்கள், வீதியில் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள், கும்பல் வல்லு றவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்படு கிறார்கள். எங்கே சென்றது பெண்கள் சக்தி? மல்யுத்த வீராங்கனைகள் அதன் குழுவின் தலைவராலேயே தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உன்னாவோ மற்றும் கத்துவா சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களும் பெண்கள்தான். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எனவே இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுவது ஏதோ பெண்கள் சக்தி மீதான விருப்பத்தால் அல்ல. இது அரசியல் லாபம் கருதியே கொண்டுவரப்படுகிறது. இது எப்போது அமலுக்கு வரும்? பெண்களுக்கு இதன்கீழ் எப்போது உரிமைகள் கிடைக்கும்? அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். பின்னர் புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் எப்போது நடக்கும்? இவையெல்லாம் அடுத்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் நடக்கப்போவதில்லை.
காற்றோடு கலந்த வாக்குறுதிகள்
இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டமுன் வடிவை இவர்கள் கொண்டுவருகிறார்கள். இவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு காற்றாகப் போய்விட்டன. நாட்டு மக்கள் அனைவரும், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் இந்த அரசாங்கத்துடன் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். பெண்கள் பல துறை களில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை என்ன? குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், திட்டப் பணியாளர்கள், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் என்ன ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு எவ்விதமான சமூகப் பயன்பாடுகளும் கிடையாது. ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருவதன் மூலம் சமூக நீதி காற்றோடு காற்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு எங்கே இருக்கிறது? தனியார்துறையில் எங்காவது இட ஒதுக்கீடு இருக்கிறதா? பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே பட்டிய லின மக்களுக்கும், பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு. நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் உங்கள் கொள்கை.
வரலாற்றில் முதல்முறையாக
மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் 1983இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடது ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக் கிறது. நாட்டின் வரலாற்றில் அதுவே முதன்முறையாகும். கேரளாவில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக் கப்பட்டிருக்கிறது. உண்மையான எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். பொதுத் தொகுதிகளில்கூட பெண்கள் போட்டியிடுகிறார்கள். இது வரலாறு.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வரலாறு என்ன?
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாஜக-வின் ஆட்சிக் காலத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றிருக்கிறது. அனைத்து அம்சங்களிலும் பெண்கள் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவை அனைத்தையும் அமைதி யாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “எல்லாருக்கும் எல்லாம்” (“ஷப்கா சாத் சப்கா விகாஷ்”) என்று இவர்கள் முழக்கம் இட்டபோதிலும், இவர்களின் அமைச்சர வையில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவராவது இடம் பெற்றிருக்கிறாரா? இதுதான் பாஜக-வின் அணுகுமுறை. இதுதான் அவர்கள் கொள்கை. இவ்வாறு எளமரம் கரீம் பேசினார். (ந.நி.)