states

img

கடித ஆதாரம் இருந்தும் கைது செய்யப்படாத ஈஸ்வரப்பா!

உடுப்பி, ஏப்.13- கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் இந்தலகா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல் (40). ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற சங்- பரிவார் அமைப்பின் தேசியச் செய லாளராக இருந்து வந்தார். அந்த செல்வாக்கு மூலமாகவே, அரசுத் துறைகள் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார்.  இந்நிலையில், கடந்த சில மாதங் களுக்கு முன்பு கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா வளர்ச்சிப் பணி களை மேற்கொள்ளும் காண்ட்ராக் டர்களிடம் 40 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார் என்று புகார் கூறினார். பாஜகவைச் சேர்ந்த காண்ட்ராக் டர் ஒருவரே, அந்தக் கட்சியின் மாநில அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் பாஜக தலைமை நடவடிக்கை எது வும் எடுக்கவில்லை.

இதையடுத்து, சந்தோஷ் பாட்டீல், கடந்த மார்ச் 11 அன்று பிர தமர் நரேந்திர மோடி மற்றும் ஒன் றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோ ருக்கு நேரடியாக கடிதம் எழுதினார்.  “பெலகாவியில் ரூ. 4 கோடி மதிப் பில் சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டேன். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 40 சதவிகித கமி ஷன் கொடுத்தால் மட்டுமே நிதியை ஒதுக்கீடு செய்வதாக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகிறார். ஆனால், எனக்கு வட்டிக்குப் பணம் கொடுத்த வர்கள் தற்போது கடனைத் திரும்பக் கேட்டு மிகுந்த அழுத்தம் கொடுக்கி றார்கள். எனவே அரசு உடனடியாக எனது நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பிரதமர் மோடி தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்’’ என்று கூறி யிருந்தார். இந்த முறையீட்டிற்கும் பலனில்லை. அதன்பிறகு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வாட்ஸ்-ஆப் பில் புதிய தகவல் ஒன்றை வெளி யிட்ட சந்தோஷ் பாட்டீல், “அமைச்சர் ஈஸ்வரப்பாவின் தொல்லையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனால் நான்  தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன்” என்று பரபரப்பை ஏற்படுத்தி னார். அத்துடன் திடீரென அவர் காணாமலும் போனார். இதில் பயந்து போன சந்தோஷ் பாட்டீலின் மனைவி, தனது கணவரை கண்டுபிடித்துத் தரு மாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் பாட்டீலை போலீ சார் தேடி வந்தனர். 

இதனிடையேதான், செவ்வா யன்று காலை உடுப்பியில் உள்ள தனி யார் தங்கும் விடுதியின் அறை ஒன் றில் சந்தோஷ் பாட்டீல் விஷமருந் திய நிலையில், பிணமாக மீட்கப் பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்தோஷ் பாட்டீல் உடலை  உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த துடன், அவர் கைப்பட எழுதி வைத்தி ருந்த கடிதம் ஒன்றைக் கைப்பற்றி னர். அதில், “எனது தற்கொலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மட் டுமே காரணம்” என்று உறுதிபடக் குறிப்பிட்டிருந்த சந்தோஷ் பாட்டீல், “எனது லட்சியங்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த முடிவை நான் எடுக்கி றேன். நமது பிரதமர் மோடி, கர் நாடகா முதல்வர், நமது அன்புக்குரிய லிங்காயத் தலைவர் பிஎஸ் எடி யூரப்பா மற்றும் அனைவரும் எனது மரணத்திற்கு பின்னர், எனது மனைவி,  மகனுக்கு உதவி செய்ய வேண்டும்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும்” என்று உருக்கமான வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

விஷம் குடிப்பதற்கு முன்னதாக,  தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பிய குறுஞ்செய்தியிலு ம், “நான் திரும்பாத ஊருக்குப் பய ணம் செய்யப் போகிறேன். என்னு டைய ஆசைகள் அனைத்தையும் அடக்கிக்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். பிக்னிக் செல்கி றோம் என்று பொய் சொல்லி சில நண்பர்களை அழைத்து வந்துள் ளேன். ஆனால், எனது மரணத்திற்கு அவர்கள் காரணமில்லை” என்றும் “எனது பிரச்சனைகளை எடுத்து ரைத்த அனைத்து நண்பர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றும் சந்தோஷ் பாட்டீல் குறிப்பிட்டுள் ளார். தற்போது சந்தோஷ் பாட்டீலின் தற்கொலை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 

“அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டுக்களை கூறிய சந் தோஷ் கொலை செய்யப்பட்டுள் ளார். போலீசார் தாமாக முன்வந்து ஈஸ்வரப்பா மீது இந்திய தண்டனைச்  சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு பதிவு செய்ய வேண்டும். அவரை அமைச்சரவை யில் இருந்து நீக்குவதுடன், உடனடி யாக கைது செய்ய வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்த ராமையா கூறியதுடன், இந்தக் கோரிக்கையை முன்வைத்து, காங்கி ரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக, அமைச்சர் ஈஸ்வ ரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு, இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீஸ் தடியடியை எதிர்கொண்ட அவர்கள், ஈஸ்வரப்பா பதவி வில கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்  எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் உள்ளிட்டோ ரும் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி னர்.

நெருக்கடி அதிகமாகவே, சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் ஈஸ்வரப்பாவை முதல் குற்றவாளி யாகவும், அவருடைய உதவியா ளர்கள் இரண்டு பேரை, 2-ஆவது மற்றும் 3-ஆவது குற்றவாளியாக வும் சேர்த்து, தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் போலீசார் தற் போது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் கைது நடவடிக்கை எதை யும் மேற்கொள்ளவில்லை. அமைச்ச ரவையிலிருந்தும் ஈஸ்வரப்பா நீக்கப்படவில்லை. மாறாக, “தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. விசாரணையின் முடிவு தெரியும்வரை ஈஸ்வரப்பா ராஜி னாமா செய்ய வேண்டியதில்லை’’ என்று பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை உபதேசம் செய்துள்ளார். அமைச்சர் ஈஸ்வரப்பாவோ, “சந்தோஷ் பட்டீல் என்ற நபர் யார்? என்றே எனக்குத் தெரியாது” என்றும், “இந்த சம்பவத்திற்காக, அமைச்சர் பதவியிலிருந்து வில கும் பேச்சுக்கே இடமில்லை” என்றும் ஆணவமாக கூறியுள்ளார்.