states

img

வடமொழி பெயர் வேண்டாம்.. திருப்பதி மாவட்டமே சரி!

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்களை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் அறிவித் தார். அதில், சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட் டமும், சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட் டங்களில் சில பகுதிகளை பிரித்து திருப்ப தியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டமும் உருவாக்கப்படும் என்றார். இந்நிலையில், பாலாஜி என்பது வடமொழிச் சொல் என்றும், திருப்பதி என்றே பெயரையே மாவட்டத்திற்கு சூட்ட வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.