states

img

நீட் பி.ஜி. ‘கட்-ஆப்’ பூஜ்ஜியமாக குறைப்பா? தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, செப்.27- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்து வப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி  அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.  இந்நிலையில், நீட் முது நிலை தேர்வில் தகுதி மதிப் பெண் (கட்-ஆப்) பூஜ்ஜிய மாக குறைக்கப்பட்டது. அதாவது, நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க லாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த செப்.20 அன்று அறிவிப்பு வெளியிட்டது.  ஏற்கனவே 2 சுற்று முது நிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-வது சுற்று கலந்தாய்வில் பங் கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப் பட்டுள்ளது.   இந்த அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே முது நிலை நீட் தேர்வு எழுதிய 3 மருத்துவ மாணவர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஒன்றிய அரசின் அறிவிப்பு காரணமாக நீட் முதுநிலை தேர்வின் நோக்கம் சிதைக்கப் பட்டுள்ள தாகவும், எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தேர்வு கள் வாரியம் மற்றும் மரு த்துவ கலந்தாய்வு கமி ட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.