states

img

பாஜக தலைவர் சீமா பத்ரா சிறையிலடைப்பு

ராஞ்சி (ஜார்க்கண்ட்), செப்.3- வீட்டு வேலைக்காக அழைத்து வந்த  பழங்குடியினப் பெண்ணைத் தாக்கி கொடூரமாக சித்ரவதை செய்து, சிறு நீரை குடிக்குமாறு வற்புறுத்தி, கழிவறை யை நாவால் சுத்தம் செய்ய வைத்த பாஜக மகளிரணித் தலைவர் சீமா பத்ராவை ஜார்க்கண்ட் காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்  வர் பத்ராவின் மனைவி சீமா. இவர்களது வீடு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அசோக்நகர் பகுதியில் உள்ளது. இவர்  வீட்டு வேலைக்காக சுனிதா காக்கா (29)  என்ற பழங்குடியினப் பெண்ணை  அமர்த்தியுள்ளார். சீமா, சுனிதாவை  அறை யில் அடைத்து வைத்து பட்டினி போட் டுள்ளார். சூடான இரும்பு கம்பிகள் மற்  றும் சட்டியால் தாக்கியுள்ளார். கழிப்பறை  டாய்லெட்டை நாவால் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

இந்த நிலையில், சீமாவை கைது செய்த காவல்துறையினர் அவரை ராஞ்சி யில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சீமாவை செப்.12-ஆம் தேதி வரை  சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். சுனிதா காக்கா ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனு மதிக்கப்பட்டுள்ளார். நாவால் கழிவறையை “சுத்தம்” செய்ய சொன்னது வன்கொடுமையின் உச்சம். பழுக்க காய்ச்சிய கம்பிகளால் சூடு போடப்பட்டுள்ளார். 8 ஆண்டுகள் இந்த கொடுமையை சுனிதா அனு பவித்துள்ளார்.  இந்த கொடுமையை சகிக்காமல் அந்த பணிப் பெண்ணுக்கு உதவ முயற்சி  செய்த சீமாவின் மகன் ஆயுஷ்மானை மன நல மருத்துவரிடம் அனுப்பியுள்ளார்  சீமா. கடைசியில் மகன் மூலமாகவே இந்த  கொடுமை வெளியுலகிற்கு வந்திருக்கி றது.  காவல் துறை சுனிதாவை மீட்ட போது  அவருடைய உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.  மக்கள் மத்தியில் கோபமும், எதிர்ப்  பும் ஏற்பட்ட நிலையில் வேறுவழியின்றி பாஜக, சீமாவை கட்சியை விட்டு நீக்கி யது. 

கடும் தண்டனை அவசியம்: சிஐடியு

இந்நிலையில், சுனிதாவை கொடு மைப்படுத்திய சீமா பத்ராவிற்கு கடுமை யான தண்டனை வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட சுனிதாவிற்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்; தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய  எஸ்சி-எஸ்டி ஆணையம் மற்றும் தேசிய  மகளிர் ஆணையம் ஆகியவை இந்த  விஷயத்தை தானாக முன்வந்து, பழங்குடியின வீட்டுப் பணிப்பெண் ணான சுனிதாவுக்கு உச்சபட்ச நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சிஐடியு பொதுச்செயலா ளர் தபன் சென் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பழங்குடியினப் பணிப் பெண்ணான சுனிதாவுக்கு கொடுமைகள் இழைத்த சீமா பத்ரா பாஜக மகளிர் பிரிவின் (பாஜக மகிளா மோர்ச்சா) தேசியக் குழு உறுப்பினராகவும், “பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ” (பெண் குழந்தைகள் பாதுகாப்பு) பிரச்சாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. பாஜக பெண்களை  பாதுகாக்கிறது; உரிமைகள் வழங்குகிறது என்பதெல் லாம் வெறும் உதட்டளவில் மட்டும்  தான் என்பதையே சீமா பத்ராவின் நட வடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டத் தைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பொறுப்பில் இருந்த ஒரு ஐஏஎஸ்- அதிகாரியின் வீட்டில் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

சம்பவம் நடைபெற்று ஒரு வார காலத்திற்குப் பின்னரே பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் நடவடிக்கை விந்தையாக உள்ளது. நாட்டில் பணிபுரியும் பெண்களில் மிகப் பெரிய பிரிவினராக  வீட்டு வேலை  செய்பவர்கள் உள்ளனர்.  அதிலும் வீடு களில் தங்கியிருந்து வேலை செய்யும்  தொழிலாளர்களில் பழங்குடியினப் பெண்களே அதிகம் உள்ளனர். இவர்கள்  உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்  படுகின்றனர். இவர்களுக்கு அங்கீ காரமோ, பணிப்பாதுகாப்போ இல்லை. வீட்டு வேலை பணியாளர்களுக்கான பாதுகாப்புச்சட்டத்தை அரசு இயற்று வது அவசியம் என்பதை சுனிதா சித்ர வதை செய்யப்பட்ட சம்பவம் உறுதிப் படுத்துகிறது.

ஐஎல்ஓ கூறியதை நிராகரிக்கும் மோடி அரசு

வீட்டு வேலை பணியாளர்களை  தொழிலாளர் சட்ட வரையறைக்குள் கொண்டுவர வெண்டுமென சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) சிறப்பு மாநாடு 189 - குறிப்பிடும் வீட்டு  வேலைப் பணியாளர்களின் உரிமை களை ஏற்க மோடி அரசு மறுக்கிறது. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும்  அரசாங்கத்தால் பல வரைவு சட்டங்கள்  மற்றும் கொள்கைகள்  விவாதிக்கப் பட்டுள்ளது. வீட்டு வேலை பணியாளர்  களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்ய பாஜக அரசு மறுக்கிறது. ஐஎல்ஓ  மாநாடு வலியுறுத்திய தொழிலாளர் பாது காப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.  சட்டம் காகிதத்தில் மட்டுமே உள்ளதால் அதிகாரத்தில் உள்ள பலர் சீமா பத்ராவின் மனநிலை யிலேயே உள்ளனர். இந்தத் தருணத்தில் சுனிதாவுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுக்க  வேண்டும். வீட்டு வேலை பணியா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்,  சமூகப் பாதுகாப்பு, பணி செய்யுமிடத்தில் கண்ணியம் ஆகியவற்றை உறுதிப் படுத்த தொழிலாளி வர்க்கம் குரலெழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.