ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தின் பயானா நகர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி யில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக் கான தண்ணீர் குளிர்விப் பானில், தண்ணீர் குடித்த தற்காக 7-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது தலித் சிறுவனை ஆசிரியர் கங்காராம் குர்ஜார் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளார். ஆசிரி யரின் இந்த தாக்குதலில் முதுகுப்பகுதியில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட, வலி தாங்க முடியாமல் சிறு வன் வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளான். பெற்றோர், உறவினர்கள் கிராம மக்கள் என அனைவரும் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்கு முன்பு போராட்டம் நடத்தினர். புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கங்கா ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், துரிதமாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்து போராட் டம் செய்தவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பயானா காவல் நிலைய ஆய்வாளர் சுனில் குமார். போலீசில் அளித்த புகாரை திரும்பப் பெற ரூ.2 லட் சம் வழங்குவதாகவும், இக்கோரிக்கையை ஏற்காவிட் டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை ஆசிரியர் மிரட்டியதாகவும் தலித் மாணவரின் சகோதரர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என ஆய்வாளர் சுனில் குமார் உறுதியளித்துள்ளார்.