states

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தில்லி-கார்கிலுக்கு சைக்கிள் பயணம்

புதுதில்லி, ஜூலை 3-  இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தில்லியில் இருந்து கார்கில் மலைப்பகுதிக்கு 2 பெண் அதி காரிகள் தலைமையில் வீரர்கள் சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளனர். இந்திய ராணு வமும், விமானப்படையும் இணைந்து சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. தில்லி முதல் டிராஸ் வரையிலான இப்பய ணம் சனிக்கிழமையன்று தொடங்கியது. ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 20 வீரர்கள் அடங்கியக் குழுவிற்கு, ராணுவ மேஜர் ஸ்ரிஷ்டி சர்மா, விமானப் படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் மேனகா குமாரி ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமையேற்றுச் செல்கின்ற னர். தில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அருகிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பயணத்தை, ராணுவத்தின் சமிக்ஞை பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு.நாயர், விமானப்படையின் மேற்கு பிராந்திய தளபதி ஏர் மார்ஷல் ஆர்.ரதீஷ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். சைக்கிள் பயணக் குழுவினர் 24 நாட்களில் மொத்தம் 1,600 கி.மீ. தொலை வுக்கு பயணம் செய்து, கார்கில் போரின் போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கார்கில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள டிராஸ் பகுதியை ஜூலை 26-ஆம் தேதி சென்றடைகின்றனர்.

;