20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது. 10 கிமீ தூரத்திற்கு பாதயாத்திரை உடன் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பேரணி - பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், சுரங்க மாபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜார்க்கண்ட் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சுபாஷ் முண்டாவி புகைப்படங்களை உயர்த்தி பிடித்து, அவரைக் கொன்றவர்களைத் தண்டிக்கக் கோரிக்கை விடுத்தார். சுபாஷ் முண்டாவின் பெற்றோர் மற்றும் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் பேரணியில் பங்கேற்றனர்.