விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப்.7 அன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தை நடத்துகிறது. இதனையொட்டி ஞாயிறன்று (செப்.3) ஆயிரம் விளக்கு பகுதி, கோடம்பாக்கம் மார்க்கெட்டில் பிரச்சாரத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதி செயலாளர் வெ.ரவீந்திர பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.