ஊழலா? நிர்வாக திறமையின்மையா?; விமான விபத்துக்கு விளக்கம் அளிப்பாரா பிரதமர் மோடி
வைரலாகும் 2023ஆம் ஆண்டு பேச்சு
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை 2022ஆம் ஆண்டு ரூ.18,000 கோடிக்கு வாங்கியது டாடா குழுமம். தற்போது டாடா குழுமத்தின் முழு கட்டுப்பாட்டில் ஏர் இந்தியா உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி, ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்த்ததை நல்லது என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”2014ஆம் ஆண்டுக்கு முன்பு ஏர் இந்தியா பற்றி விபத்து மற்றும் ஏதேனும் விவாதம் எழுந்தால், அது நெகட்டிவான விஷயங்கள் பற்றிய தாகவே இருக்கும். காரணம் காங்கிரஸ் ஆட்சியில் ஏர் இந்தியா நிர்வாகத்தில் ஊழலால் நிரம்பியி ருந்தது. இப்போது, இந்தியாவின் திறனை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஏர் இந்தியா புதிய உயரத்து க்கு பறந்து கொண்டிருக்கிறது” என ஏர் இந்தியாவை டாடா வாங்கியதை பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 275 பேரை காவு வாங்கியது. இந்த விபத்திற்கு காரணம் ஊழலா? நிர்வாகத் திறமையின்மையா? என விமான விபத்து க்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா? என நாடு முழுவதும் கேள்விக்கணைகள் எழுந்துள்ளன. முக்கி யமாக பிரதமர் மோடி 2023ஆம் ஆண்டு பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.