states

img

24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

புதுதில்லி, ஜன.16- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தி யாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஞாயிறு காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் ஞாயிறு காலை எட்டு மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.  நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.  ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 314 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோ னாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணி க்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 066 ஆக அதி கரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 7,743 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

;