புதுதில்லி, ஏப்.9- இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வார புள்ளி விவரப்படி 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருவ தால் ஒன்றிய அரசு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்று மாறு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார். அக்கடிதத்தில், “மாநிலங்களும், யூனியன் பிரதேசங்க ளும் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு முழு வீச்சில் அனுமதியளித்துள்ள நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்கள் கொரோனா பரிசோதனை, தொற்று தொடர்பு கண்டறி தல், சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கை களைப் பின்பற்றுமாறு 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.