புதுதில்லி, ஜன.6- ஒன்றிய சுகாதாரத்துறை, உள்துறை இணையமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 3 ஒன்றிய அமைச்சர்கள், 1 எம்.பி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள னர். தில்லியில் தற்போது கொரோனா 3-வது அலை வீசுவதாக தில்லி அரசு அறிவித் திருந்தது. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டி லேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக தம்மை சந்தித்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பாஜக எம்.பி மனோஜ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தில்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரையிலான முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள், கடை களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறினார்.