states

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா

புதுதில்லி, ஜன.24-  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.  இதில் 271 பேர் மாநிலங்களவையிலும் மற்றவர்கள்  மக்களவையிலும் பணியாற்றுபவர்கள் ஆவர். இதனிடையே குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா  நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஹைதரா பாத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 15 மாத ங்களில் 2வது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.