states

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா

புதுதில்லி, ஜன.1- மகாராஷ்டிராவில் பத்து அமைச்சர் கள், 20 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: மகாராஷ்டிராவில் தொடர்ந்து வேகமாக கொரோனா பரவி வருகிறது. பத்து அமைச்சர்கள் மற்றும் இருபது சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதி கரித்தால், கடும் கட்டுப்பாடுகளை விதிப் பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று அவர் கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டில் வேகமாக பரவி வரும் உரு மாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற் றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 1,431-ஆக அதிகரித்துள்ள தாகவும், மகாராஷ்டிரத்தில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித் துள்ளது.

ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர் களில் 488 பேர் குணமடைந்து வீடு திரும் பிய நிலையில், 943 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று தற்போது 23 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 454 பேருக்கும், தில்லி யில் 351 பேருக்கும், தமிழ்நாட்டில் 118 பேருக்கும் பரவியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு நிலையில் தமிழ்நாடு மூன்றா வது இடத்தில் உள்ளது. கேரளத்தில் 109 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 115 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப் பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், இமாச்சல், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.