புதுதில்லி,பிப்.9- வெள்ளெலிகளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதன்மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஹாங்காங்கில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்தது. இது தொடர்பான ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகள் மூலம் 50 பேருக்கு வைரஸ் பரவியது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து 2,200 வெள்ளெலிகள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில், வெள்ளெலிகளுக்கு டெல்டா வகை வைரஸ் பரவியிருந்ததும், அந்த வகை வைரஸே ஹாங்காங் மக்களுக்கு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.