புதுதில்லி, ஆக. 17 - மணிப்பூரில் பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களுக்கு தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொண்ட தனி நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குக்கி-ஜோ பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், மணிப்பூர் இனக் கலவரத்தால் தங்களின் வீடுகள், வாழ்வா தாரத்தினை இழந்த குக்கி-ஜோ பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 500 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களில் 7 பேர் ஆளும் பாஜக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்களின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இம்பால் பள்ளத்தாக்கு எங்களுக்கு மரணப் பள்ளத்தாக்காக மாறியுள்ள நிலை யில், குக்கி - ஜோ பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், எம்சிஎஸ் (மணிப்பூர் குடிமைப்பணி) மற்றும் ஐபிஎஸ், எம்பிஎஸ் (மணிப்பூர் காவல் பணி) அதிகாரிகள், இம்பால் பள்ளத்தாக்குக்கு மாற்றப்பட்டு விட்டதால் அவர்களால் தங்களின் கடமையினைச் செய்யமுடியாமல் போனது.
இதனால் குக்கி-ஜோ பழங்குடியின அரசு அதிகாரிகள் சந்திக்கும் சிக்கலைத் தீர்க்கவும், சூரசந்த்பூர், காங்போக்பி, சாந்தேல், தென்நவு பால், பெர்சாவ்ல் ஆகிய ஐந்து மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத் தினை உறுதி செய்யவும் தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்கு நர் அல்லது அதற்கு இணையான உயர் அதிகாரம் கொண்ட பதவிகளை உடனடியாக உருவாக்க வேண்டும். அதேபோல், பொது நலன் கருதி குடிமைப்பணி மற்றும் காவல் துறைகளில் முக்கிய உயர் பதவிக ளையும் உருவாக்க வேண்டும். மணிப்பூர் இனக் கலவரத்தால் தங்களின் வீடுகள், வாழ்வாதா ரத்தினை இழந்த குக்கி-ஜோ பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 500 கோடி வழங்க வேண்டும்.” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் நடைபெற்றுவரும் இனக்கலவரத்தை கண்டித்து கட்சி பேதமின்றி குக்கி-ஜோ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏ-க்களும் ஆகஸ்ட் 21 அன்று துவங்கும் மணிப்பூர் சட்டப்பேர வைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் ஏற் கெனவே அறிவித்துள்ளனர்.