அசாம், மே 21- வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் காரணமாக மதகுகள் உடைந்தன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மூன்று மாநிலங்களிலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மாநிலங்க ளில் அசாம் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் இதுவரை மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும் 25 பேர் உயிரி ழந்துள்ளனர். அசாம் மாநில மக்கள் வெள்ளத் துடன் போராடி வருகின்றனர். இங்குள்ள ஜமுனாமுக் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வெள்ளத்தில் மூழ்காத ஒரே உயர மான பகுதியான ரயில் தண்ட வாளத்தில் குடியேறியுள்ளனர்.
ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள சாங்ஜூரை, பாட்டியா பத்தர் கிரா மத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர். தார்ப்பாய் களை மேற்கூரையாக்கி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. 43- வயதான மோன்வாரா பேகம் கூறுகையில், பாட்டியா பத்தர் கிராமத்தில் உள்ள வீடு வெள்ளத்தில் இடிந்து விழுந்துவிட்டது. எனது குடும்பம் மட்டுமல்ல, என்னோடு தங்கியுள்ள நான்கு குடும்பங்கள் உணவு இல்லாமல் தவிக்கிறோம் என்றார். அழகு போர்டோலோயி கூறு கையில், சாங்ஜூரை கிராமத்தில் உள்ள எனது வீட்டை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.
அறுவடை க்கு தயாரான நெல் பயிர் வெள்ளத் தில் அழிந்து விட்டது என்றார். அசாமில் 29 மாவட்டங்களில் உள்ள 2,585 கிராமங்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக கப்பட்டுள்ளனர். பருவமழைக்கு முந்தைய மழையால் ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 343 நிவா ரண முகாம்களில் 86,772 பேர் தஞ்ச மடைந்துள்ளனர், அருணாச்சலப் பிரதேச தலை நகர் இடாநகரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. நகரம் முழுவ தும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேகாலயாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மூன்று பேர் உயிரிழந்தனர்.