காங்கிரஸ் தலைவர் கவுரவ் வல்லப் குற்றச்சாட்டு
அகமதாபாத், பிப்.24- குஜராத்தில், நிலக்கரி விநி யோகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 6 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்த ஊழலில், தற்போது பிரத மராக இருக்கும் நரேந்திர மோடி துவங்கி, ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி மற்றும் பூபேந்திர பாய் படேல் உள்ளிட்ட குஜராத்தின் நான்கு முதல்வர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்கா ணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் கவுரவ் வல்லப், செய்தியா ளர் சந்திப்பின்போது மேலும் கூறி யிருப்பதாவது: “நாடு முழுவதும் உள்ள சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு நல்ல தரமான நிலக்கரியை மலிவு விலையில் வழங்குவதற்காக 2007 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் ஒரு கொள்கையை வகுத்தது. இந்தக் கொள்கையின் கீழ், நிலக்கரி டன் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்து 800 முதல் ரூ.3 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் சிறு, நடுத்தரத் தொழிற்சாலை களுக்கு வழங்க உத்தரவாதம் ஏற் படுத்தப்பட்டது.
இந்த வகையில், குஜராத்தி லுள்ள சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்காக ‘கோல் இந்தி யா’வின் மேற்கு நிலக்கரி வயல் மற்றும் தென்கிழக்கு நிலக்கரி வயல் களில் இருந்து ஒவ்வொரு மாதமும் நிலக்கரி அனுப்பப்பட்டது. ஆனால், குஜராத்தில் கடந்த 14 ஆண்டுகளில், ‘கோல் இந்தியா’ நிறு வனத்திடம் இருந்து 60 லட்சம் டன் நிலக்கரி எடுத்ததாக, எந்தெந்த தொழிற்சாலைகளின் பெயர்கள் ஆவணங்களில் உள்ளதோ, அந்த தொழிற்சாலைகளுக்கு உண்மை யில் நிலக்கரி சென்றடையவில்லை. மாறாக, வெளி மாநிலங்களி லுள்ள பெரிய தொழிற்சாலை களுக்கு டன் ஒன்று ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் என்ற கூடுதல் விலைக்கு விற்று முறைகேடு செய் யப்பட்டுள்ளது. ‘கோல் இந்தியா’ வுக்கு குஜராத் அரசு பொய்யான தகவல்கள் அளித்து நிலக்கரிகளை பெற்றுள்ளது. .
இந்த முறைகேடு அரங்கேற்றப் பட்ட கடந்த 14 ஆண்டுகளில், நரேந் திர மோடி, ஆனந்தி பென், விஜய் ரூபானி, பூபேந்திரபாய் படேல் என நான்கு பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். தொழிற்துறையை யும் இவர்களே வகித்துள்ளனர். இவர்களுக்கு இந்த முறைகேட்டில் தொடர்புள்ளது. எனவே, குஜராத்திலுள்ள ‘கோல் இந்தியா’வின் வயல்களிலி ருந்து, ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பி லான 60 லட்சம் டன் நிலக்கரி காணா மல் போனது குறித்து, உச்ச நீதி மன்றத்தின் பதவியில் இருக்கும் நீதி பதியின் கீழ் காலவரையறை நிர்ண யித்து விசாரணை நடத்த வேண் டும். “இந்த முறைகேடு தற்செயலா னதா, அல்லது ஒரு திட்டமிட்ட ஏற்பாடா?” என்று அமலாக்கத்துறை (ED), தீவிர மோசடிகளுக்கான விசா ரணை அலுவலகம் (SFIO), வருமான வரித்துறை (Income Tax), நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) உள்ளிட்ட முகமைகளும் ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஏனெ னில், இதில், போலி பில்களை உரு வாக்கி வருமான வரி, விற்பனை வரி மற்றும் ஜிஎஸ்டி ஏய்ப்பும் நடந்தி ருக்கலாம்” என்று கவுரவ் வல்லப் குற் றம் சாட்டியுள்ளார்.