புதுதில்லி, ஜூலை 15 - இந்தியப் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ளதாகக் காட்டும் வீடியோ வை வெளியிட்டதற்காக, பிரதமர் மோடி யும், பாஜக-வும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாஜக ஒரு அனிமேஷன் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டது. அந்த வீடியோ வில் பிரதமர் மோடி உலகத்தைப் பார்ப்பது போல அனிமேஷன் காட்சி சித்தரிக்கப் பட்டிருந்தது. இதனிடையே, அந்த வீடியோ வில் இந்தியப் பகுதிகள், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிகளாக காட்டப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் கண்டனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து அந்த வீடியோவை பாஜக நீக்கியது. எனினும், இவ்விவகாரத்தில் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடே வலியுறுத்தியுள்ளார். “பிரதமர் மோடி, உலகத்தைப் பார்ப்பது போல் ஒரு அனிமேஷன் வீடியோவை பாஜக-வும், அதன் தலைவர்களும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் இடம் பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் சில இந்தியப் பகுதிகள், பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இருப்பதுபோல் சித்த ரிக்கப்பட்டுள்ளன. இதை இந்திய இறை யாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீதான தாக்குதல் எனக் கொள்ளலாம். இதைப் பொதுமக்கள் சுட்டிக்காட்டிய வுடன், பாஜக தலைவர்கள் அந்த வீடி யோவை நீக்கி விட்டனர். பாஜக இந்திய வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்தால் ரூ. 100 கோடி அபராதம், 7 ஆண்டு சிறைத் தண்டனை என்று மசோதா கொண்டு வந்தது. ஆகவே, இந்த தவற்றுக்கு பொ றுப்பேற்று பிரதமர் மோடியும், பாஜக தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சுப்ரியா ஸ்ரீனடே கூறியுள்ளார்.