காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், தலைவர் பவன் கேரா
அமெரிக்க வர்த்தக செயலாளர் டிரம்ப்பின் அதிகாரத்தால் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்டது. அந்த அதிகாரத்துக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், இந்தியா வும் பாகிஸ்தானும் டிரம்பை மதிக்காமல் மீண்டும் சண்டையில் ஈடுபடும் எனக் கூறியிருக்கிறார். இப்போதாவது ‘வாய் திறப்பாரா மோடி?’
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
இந்தியா ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற் கான திட்டங்களைத் தயாரித்து வருகையில், சீனா ஏற்கனவே ஆறாம் தலைமுறை போர் விமானத்தின் மாதிரி விமானங்களைப் பறக்க விட்டுவிட்டது. பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
பத்திரிகையாளர் ராணா அயூப்
இந்து பெண் முஸ்லிம் ஆணை “சிறப்பு திருமணச் சட்டத்தின்” (Special Marriage Act) கீழ் திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தி னர் 60 பேர் அந்த முஸ்லிமின் கடையை தாக்குகின்ற னர். காசியாபாத் காவலர்கள் கணவனின் இரு சகோத ரிகளை கைது செய்து, அத்தம்பதி வீட்டை சோதனை செய்து, கணவன் மீது “கடத்தல்” வழக்குப் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் நுமான் முகமது
“வெளிநாட்டு மாணவர்கள் நேரடியாக வகுப்பு களுக்கு வர வேண்டும். இல்லையெனில் அவர்களது விசா ரத்து செய்யப்பட்டு, நாடு கடத் தப்படுவார்கள் என்றும் டிரம்ப் எச்சரித்திருக்கிறார். இது மாணவர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் இதில் தலையிட வேண்டும்!”