புதுதில்லி, ஆக. 4 - ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். காங் கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் களும் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
“இந்தியா” வரவேற்கிறது
ராய்ப்பூர், ஆக. 4 - “இது இந்தியாவின் வெற்றி”. இருள் அதிகமாக இருந்தாலும், கடல் குறுக்கே இருந்தாலும், உண்மையே அடிப்படையாக இருந்தால் ஒளி எப்போதும்வெல்லும். ராகுல் காந்தியின் தண்டனை யை நிறுத்தி வைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ‘இந்தியா’ வரவேற்கிறது என சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.