states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா

கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா பாஜக  அரசாங்கம் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலும் அழித்துவிட்டது. ஒவ்வொரு ஆட்சியிலும் பொய்யான கோஷங்களையும், சதித்திட்டங்களையும் அறிவித்து மாணவர்கள், இளைஞர்களை பாஜக ஏமாற்றி வருகிறது. பாஜகவால் ஹரியானா இளைஞர்கள் மிகுந்த சிரமத்தில் தவிக்கின்றனர்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவர் சஞ்சய் சிங்

நிதி ஆயோக் கூட்டம் இப்போது ஒரு சம்பிரதா யமாக மட்டுமே உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் ஒன்றிய அரசு கொடுக்கும் திரைக்கதையில் எழுதப்பட்டதை மட்டுமே பேசுகின்றன. ஒன்றிய அரசின் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக மட்டுமே பாஜக முதலமைச்சர்கள் வேலை செய்கிறார்கள்.

ஊடகவியலாளர் அஜித் அஞ்சும்

பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள பயன்படும் செந்தூரம் குடிக்கப்படுவதோ சாப்பிடப்படுவதோ நரம்புகளில் ஓடுவதோ உடலுக்கு ஆபத்தானது. ராஜஸ்தானில் மோடி பேசியதை, நம்பி யாரும் எந்த ஆபத்தான செயலிலும் இறங்கி விட வேண்டாம். பீகார் தேர்தல்கள் வருவதால் இது போன்ற பஞ்ச் வசனங்கள் பேசப்படும். நம்பி விட வேண்டாம். செந்தூரத்தை குழந்தைகள் பயன்படுத்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

தேசிய பொது சுகாதார நிபுணர் சந்திரகாந்த் லஹரியா

தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததாக அறிக்கைகள் வந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் சில பகுதிகளில் அதிகரித்துள்ளன. எனினும் பதற்றம் மற்றும் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.